Followers

Monday, August 27, 2018

" `மேற்குத் தொடர்ச்சி மலை' எனக்குத் திருப்தியாக இல்லை" - விஜய் சேதுபதி

Merku Thodarchi Malai

நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவான படம் `மேற்குத் தொடர்ச்சி மலை. லெனின் பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் பலர் நடித்து வெளியாகியிருக்கிறது படம். பலரது பாராட்டுகளையும் பெற்ற இப்படத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நேற்று (26.8.2018) ஏற்பாடு செய்திருந்தனர்.

அதில் விஜய் சேதுபதி பேசியதாவது, " `வெண்ணிலா கபடிக்குழு' சமயத்தில் இருந்தே லெனின எனக்குத் தெரியும். `பண்ணையாரும் பத்மினியும்' பட சமயத்தில் இந்தக் கதைய பத்தி என்கிட்ட சொன்னார். அப்போ என் சம்பளம் 25 லட்சம். என்கிட்ட பணம் இல்ல சார் இப்போதான் லைஃப ஆரம்பிச்சிருக்கேன். யாராவது தயாரிப்பாளர் வந்தா சொல்றேன், இல்லனா நானே சம்பாதிச்சு எடுக்குறேன். நடுவுல உங்களுக்கு வேற யாராவது தயாரிப்பாளர் கிடைச்சா கூட போயிடுங்க பிரச்சனை இல்லனு சொன்னேன். ஒரு வருஷம் கழிச்சும் கூட அதையேதான் சொன்னேன். ஆனா, கடைசியில் நான்தான் அந்தப் படத்தை தயாரிக்கணும்னு அமைஞ்சது.

படம் முடிஞ்சு ரெடியானதுக்குப் பிறகு நானும் பார்த்தேன். உண்மைய சொல்லணும்னா எனக்குப் படம் திருப்திகரமானதா தெரியல. ஏன்னா எனக்கு சினிமா தெரியும், அறிவிருக்குனு நினைச்சிருந்தேன். எனக்கு லெனின் மேல நம்பிக்கை பெருசா இருந்தது, ஒருவேளை நான் எதிர்பார்த்தது வேறயானு ஒரு குழப்பமும் இருந்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு படம் இப்போ வெளியாகியிருக்கு. நல்ல படம் எடுத்திருக்கான் விஜய் சேதுபதின்னு யாராவது பாராட்டினா அது எனக்கானது இல்ல, எனக்கு அது வேண்டவும் வேண்டாம். ஏன்னா இந்தப் படத்தை தொடங்கினதில் இருந்து, அதன் மேல நம்பிக்கை வெச்சு சுமந்துகிட்டிருந்தது லெனின் பாரதி மட்டும்தான். இப்போ நான் எடுத்த படம், நல்ல படம்னு நீங்க பேசிதான் எனக்குப் புரியுது. என் படங்களுக்கான விமர்சனங்கள் வரும்போது நிறைய பேர் மேல் கருத்து வேறுபாடும் கோபமும் வந்திருக்கு. இன்னைக்கு எனக்கு திருப்தி இல்லாத ஒரு படத்தை நீங்க எல்லாம் பாராட்டும் போதுதான், நீங்க எந்த கோணத்தில் ஒரு படத்தை பார்க்கறீங்கன்னு புரியுது, என்னுடைய பார்வைய மாற்றுது. கலைய யாராலும் சுலபமா ஜட்ஜ் பண்ண முடியாதுன்னு இப்போ புரியிது. எனக்குப் பாடம் புகட்டின அத்தனை பேருக்கும் என் நன்றி" எனப் பேசினார் விஜய் சேதுபதி.

பாட்டு, டான்ஸ் எல்லாம் ஓகே. ஆனால்...? - `லக்ஷ்மி' விமர்சனம் - Lakshmi movie review

பாட்டு, டான்ஸ் எல்லாம் ஓகே. ஆனால்...? - `லக்ஷ்மி' விமர்சனம் - Lakshmi movie review
நடனத்தின் மீது வெறி கொண்ட சிறுமி தனது கனவை நிறைவேற்றினாளா என சொல்கிறது `லக்ஷ்மி'

லக்ஷ்மி (தித்யா) அலாரம் டோன் கேட்டால் கூட துள்ளி குதித்து ஆடிவிடும் அளவுக்கு நடனத்தின் மீது வெறி கொண்ட பள்ளி மாணவி. ஆனால் அவளது அம்மா நந்தினிக்கு (ஐஸ்வர்யா ராஜேஷ்) நடனத்தின் மீது மிகப் பெரிய வெறுப்பு. மகளை நடனத்திலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒதுக்கி வைக்கிறாள். அவளது நடனத் திறமையைப் பார்த்து வியப்பாகும் கிருஷ்ணா (பிரபுதேவா), indian pride நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நினைக்கும் அவளுக்கு எப்படியாவது உதவ நினைக்கிறார். அம்மாவுக்குத் தெரியாமல் டான்ஸ் அகாடமியில் சேரவும், திறமையை வளர்க்கவும் உதவுகிறார் பிரபுதேவா. நடனம் என்றாலே வெறுப்பாகும் அம்மாவை சமாளித்து தன் திறமையை உலகத்துக்குக் லக்ஷ்மி எப்படிக் காண்பிக்கிறாள் என்பதே படத்தின் கதை. கூடவே ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடனத்தின் மேல் ஏன் அத்தனை வெறுப்பு, பிரபுதேவா யார்? போன்ற கேள்விகளுக்கும் பதில் சொல்லி படம் முடிகிறது.

வழக்கம் போல் விஜய் தன் ட்ரேட் மார்க் ஃபீலை இந்தப் படத்திலும் கொடுத்திருக்கிறார். நடனத்தில் ஆர்வம் உள்ள சிறுமியின் கதையை முடிந்த அளவு சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.

பிரபுதேவா, தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை 'மெர்குரி'யில் ஒருமுறை நிரூபித்துவிட்டார். எனவே அவருக்கு இந்தப் படத்தின் கதாபாத்திரம் சாதாரணமாக செய்ய முடியும் ஒன்றாகவே படுகிறது. ஆனாலும், கலங்கிப் போய் நிற்கும் காட்சிகளின் மூலம் தன் பங்கை சரியான முறையில் செய்து முடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பெரிய பாத்திரம் இல்லை என்றாலும் தன் இருப்பை முடிந்த வரை நன்றாகப் பதிவு செய்திருக்கிறார். படத்தின் முதன்மைக் கதாபாத்திரமாக இருந்தாலும், நடனத்தில் மட்டும் திறமையைக் காட்டியிருகிறார் தித்யா, நடிப்பில் இன்னும் கொஞ்சம் முயற்சி தேவை. தன்னைவிட சிறப்பாக நடனமாடும் ஒருவரைப் பார்த்து வியப்படைவதும், வாய்ப்பு மறுக்கப்படும் போது வெறுத்துப் போவதுமாக உணர்வுகளை கடத்தி நடித்திருந்த அர்ஜுன், சின்னச் சின்னக் குறும்புகள் செய்து கவனிக்க வைக்கும் அர்னால்ட் ஆகிய கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்திருந்தனர். ஒட்டுமொத்தமாக படத்தில் நடனத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை பேரின் நடனமும் வியப்பைத் தர தவறவில்லை.

ஆனால், அழுத்தமற்ற கதையாக்கம் படத்தின் உணர்வுகள் பார்வையாளர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் சோகம். எனவே, விஜயின் ஃபிலிமோகிராஃபியில் இன்னொரு படம் என்கிறபடியே கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. நடனம் பற்றிய படம் என்பதால் படத்தில் அதிரடியான நடனக் காட்சிகளும், வெற்றியடையும் தருணமும் மட்டும் சிறப்பானதாக இருந்துவிட்டால் போதும் என நினைத்தது போல தெரிகிறது. காரணம் பல உள்ளது. படத்தின் மையம் லக்ஷ்மி கதாபாத்திரம். அவளுக்கு நடனத்தின் மீது ஆர்வம் ஆர்வம் என்பது மட்டுமே காட்டப்படுகிறதே தவிர, எதனால் அவளுக்கு ஆர்வம், ஏன் அவளுக்கு அந்த வெற்றி தேவை என்கிற எந்த விஷயமும் இல்லை. அதனாலேயே எப்படியும் இவள் ஜெயித்துவிடுவாள் என்கிற மிதப்பு வந்துவிடுகிறது. எனவே, அவளுக்கு வரும் தடைகள் நமக்கு எந்த பதற்றத்தையும் உண்டாக்காமல் சென்றுவிடுகிறது. கோவை சரளாவின் கதாபாத்திரம் ஏன் இதை எல்லாம் செய்கிறாது என்பதற்கு சொல்லப்படும் காரணம் காமெடியாக டீல் செய்யப்படுவது, படத்தின் தீவிரத் தன்மையில் சந்தேகத்தை உண்டாக்கவே செய்கிறது. தவிர காமெடி என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் இப்படி பித்தலாட்ட வேலைகளை செய்கிறார் என்பதற்கு காரணம் இவ்வளவு சில்லியானதா?
பிரபுதேவா - ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்கு இடையேயான உறவும் மேலோட்டமாகவே சொல்லப்படுகிறது. கதாசிரியர்கள் விஜய் - நீரவ் ஷா இன்னுமும் தெளிவாக கதையை சொல்லியிருக்க வேண்டுமோ என்கிற எண்ணமும் எழுந்தது.

பரேஷ் ஷிரோத்கர், ரூல் தவ்சன், ஷம்பா நடன அசைவுகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக சாம் சி.எஸ் அமைத்திருந்த பாடல்களும் பின்னணி இசையும் கவனிக்க வேண்டியது. கூடவே நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், கலை இயக்குநர் ராஜேஷும் ஒரு கலர்ஃபுல்லான நடனத் திருவிழாவையே கண் முன் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக டான்ஸ் ரிகர்சலில், ஃப்ளாஷ் பேக்கில் வரும் பிரபுதேவாவின் நடனம், கவிதை ஒன்றை ஒலிக்கவிட்டு பிரபுதேவாவுடன் இணைந்து குழந்தைகளும் ஆடும் நடனம் இரண்டும் ரசிகர்களுக்கான அசத்தல் விருந்து. மேலும் பிரபுதேவா மற்றும் எதிரணியின் கோச் இருவருக்குமான உரசலில் இருந்த தீவிரத்தன்மை சுவாரஸ்யமானதாய் இருந்தது. ஆனால், மிகவும் எளிதாக யூகிக்கக் கூடிய அடுத்தடுத்த காட்சிகள் சோர்வாக்குகிறது.

நெகிழ வைக்க வேண்டும் என்பதற்காக காட்டப்படும் சில காட்சிகள் படத்தின் நாடகத்தன்மையை அதிகரிக்கிறது. நடனம் சம்பந்தமாக எல்லாமும் இருந்தது போல், ஒரு அழுத்தமான கதையும் இருந்திருந்தால் `லக்ஷ்மி'யின் ஆட்டம் அதிர வைத்திருக்கும். கலர்ஃபுல் நடனம், பிரபுதேவா, கிளைமாக்ஸில் வரும் வின்னிங் மொமன்டம் மட்டும் ஒரு டான்ஸ் சினிமாவிற்கு போதும் என நினைப்பவர்களுக்கு லக்ஷ்மி எந்த ஏமாற்றத்தையும் தராது.

‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சி video inside

Pyaar Prema Kaadhal

கோலிவுட்டில் அறிமுக இயக்குநர் இளன் இயக்கி சமீபத்தில் வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’. இதில் ‘பிக் பாஸ்’ போட்டியாளர்களான ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் ஜோடியாக நடித்திருந்தனர். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இதற்கு ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார், மணிக்குமரன் சங்கரா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘கே புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘YSR ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்திருந்தார்.
video link

https://youtu.be/eZCFjm0j9bQ

செப்டம்பரில் ‘சர்கார்’ பட சிங்கிள் டிராக் ரிலீஸா? release date inside...

Sarkar Movie

  • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
  • இந்த படத்தின் ஆடியோவை அக்டோபர் 2-ஆம் தேதி வெளியிடவுள்ளனர்
  • ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிற
அட்லியின் ‘மெர்சல்’ படத்திற்கு பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் 'சர்கார்' படத்தில் ‘தளபதி’ விஜய் நடித்து வருகிறார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நெகட்டிவ் ஷேடில் நடிக்கின்றனராம்.‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

சமீபத்தில், விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட படத்தின் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஆடியோவை அக்டோபர் 2-ஆம் தேதியும், படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, படத்தின் சிங்கிள் டிராக்கை வருகிற செப்டம்பர் 19-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது

`இந்தியன் 2' பட பணியைத் துவங்கிய ஷங்கர் video inside

Indian 2


  • 'இந்தியன்' முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது
  • இதிலும் கதையின் நாயகனாக கமல்ஹாசனே நடிக்கவுள்ளார்
  • ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைப
விக்ரமின் 'ஐ' படத்தின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரெடியாகி வரும் படம் '2.0'. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனையடுத்து இயக்குநர் ஷங்கர், 'இந்தியன்' படத்தின் 2-ஆம் பாகத்தை எடுக்கவுள்ளார்.

1996-ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்திருந்தார். பார்ட்-1 சூப்பர் ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் அதிகமாக உள்ளது. இதிலும் கதையின் நாயகனாக கமல்ஹாசனே நடிக்கவுள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்த படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெறுகிறதாம்.

இப்படத்திற்கு ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லக்ஷ்மி சரவணகுமார் மூவரும் இணைந்து வசனம் எழுதி வருகிறார்கள். தற்போது, இந்த படத்துக்காக ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவி வர்மனும் லொகேஷன் பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் இதர நடிகர்கள் – பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, August 26, 2018

Kerala Floods: Sunny Leone Donates 1,200 Kilos Of Food, Wishes She Could 'Do More

Kerala Floods: Sunny Leone Donates 1,200 Kilos Of Food, Wishes She Could 'Do More'Actress Sunny Leone is the latest addition to the list of celebrities who have contributed to help the people affected in flooded Kerala. On Friday, Sunny shared an Instagram post, in which she mentioned that she and her husband Daniel Weber have donated over 1,200 kg food material for the people affected in the grief-stricken area. Sunny wrote: "Today Daniel and I will hopefully be able to feed a few of the many people in Kerala that need a warm meal with 1,200 kg (1.3 tons) of rice and daal. I know it's not a dent in what actually needs to be sent and I wish I could do more." In her post, the 37-year-old actress also thanked Prateik Babbar and Siddhant Kapoor for organising a special fundraiser for Kerala. She wrote: "Humanity at its finest, Prateik Babbar and Siddhanth Kapoor, the men who arranged an amazing event at B in Juhu to bring help to those in need. You guys are so amazing




Saturday, August 25, 2018

சாலை விதிகளை மீறினால் எமன் வருவார்- பெங்களூரு போலீஸின் விழ்ப்புணர்வு பிரான்க்

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், தெரு-நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவகிறோம்- போக்குவரத்து காவல் துணை ஆணையர் அனுப் அகர்வால் தெரிவித்தார்


சாலை விதிகளை மீறினால் எமன் வருவார்- பெங்களூரு போலீஸின் விழ்ப்புணர்வு பிரான்க்
நீங்கள் சாலை விதிகளை வாகனம் ஓட்டிக் கொண்டு செல்லும்போது தீடிரென எமன் வந்து வழியை மறித்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு எமன் நாடகத்தை தான் நடத்தியுள்ளது பெங்களூரு போக்குவரத்து காவல் துறை.
ஹலசுரு கேட் போக்குவரத்து போலீஸார் ஹெல்மெட் அணியாத, பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பிற விதி மீறல்களைச் செய்பவர்களுக்கு ஆபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் விதமாக எமராஜாவை அம்பாசடராக பயன்படுத்தியுள்ளனர்.
ஜூலை மாதத்தை ஒரு சாலை பாதுகாப்பு மாதமாக நாங்கள் அனுசரிக்கிறோம். இதில் ஒரு பகுதியாக, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், தெரு-நாடகங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவகிறோம்" என்று போக்குவரத்து காவல் துணை ஆணையர் அனுப் அகர்வால் தெரிவித்தார்.
மேலும் “ நாங்கள் எமனை இந்த செய்தியை பரப்புவதற்கான கேரக்டராக பயன்படுத்துகிறோம். போக்குவரத்து நெறிமுறைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியாவிட்டால் எமன் உங்கள் வீட்டிற்கு வருவார் " என்று அவர் கூறினார்.
Advertisement
வாகன ஓட்டிகளை நிறுத்தி, சாலையின் விதிகளுக்கு ஒத்துழைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நினைவூடும் இந்த செயலில் பங்கெடுத்தவர், நாடக கலைஞரான வீரேஷ் ஆவார்.
vye0fe79ik
போக்குவரத்து பாதுகாப்பு விதிகள் முக்கியத்துவம் பற்றி பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த பிரசாரத்தின் நோக்கமாக உள்ளது. போக்குவரத்துப் போலிஸாரைப் பொறுத்தவரையில், பொது விழிப்புணர்வு இயக்கம் விபத்துகளை குறைப்பதில் உதவுகிறது என்று நம்புகின்றனர்.
இந்த ஆண்டு ஜூன் இறுதி வரை, 2,336 விபத்துகள் நடந்துள்ளது. இதில் 330 பேர் உயிரிழந்துள்ளனர், என போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்தனர்.
COMMENT
கடந்த டிசம்பர் மாத இறுதியில், 5,064 விபத்துகள் நடந்துள்ளன என்றும், இதில் 609 பேர் உயிரிழந்தனர் என்றும் கூறினர். 2016 ஆம் ஆண்டில், 7,506 விபத்துகள் நடந்தன, இதில் 754 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது