Followers

Saturday, September 8, 2018

“இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் எங்கே?” மத்திய அரசுக்கு மன்மோகன் சிங் கேள்வி

Image result for manmohan singhபிரதமர் மோடி தலைமையிலான அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு தொழில் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடில்லியில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மன்மோகன் சிங், கடந்த 4 வருடங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சதவிதம் மிகவும் குறைந்துவிட்டது. தேர்தலின் போது இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதியளித்தார். ஆனால், இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
COMMENT
மேலும், வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம் மீட்கப்படும் என பாஜக அரசு அளித்த வாக்குறுதி தொடர்பாக எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறி கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் வென்ற பாஜக அரசு, இன்னும் அதை நிறைவேற்றவில்லை. அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று மோடி கூறிவருவதை மக்கள் நம்பவில்லை என்று மன்மோகன் சிங் விமர்சனம் செய்துள்ளார்.


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Sunday, September 2, 2018

கேரளாவில் பரவும் எலிக்காய்ச்சல் - 15 பேர் பலியானதால் பதற்றம்


கேரளாவில் பரவும் எலிக்காய்ச்சல் - 15 பேர் பலியானதால் பதற்றம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேராளவில், எலிக் காய்ச்சல் மூலம் இப்போது அடுத்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இன்று எலிக் காய்ச்சலால் பெண் ஒருவர் பலியானார். இதனால் நோய் பரவலால் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோயால் கடந்த இரண்டு நாட்களில் 8 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளம் காரணமாக நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக் கிழமை மட்டும் 28 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளா முழுவதும் 40 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.
இந்த நோய் குறித்து மக்கள் பதற்றப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா. அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய அளவு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

Saturday, September 1, 2018

"சிம்புவின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்!" - நீதிமன்றம் எச்சரிக்கை

Simbu


  • சிம்பு மீது பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வழக்கு
  • 85.50 லட்சத்தை 4 வாரத்துக்குள் தர உத்தரவு
  • கொடுக்கவில்லை என்றால் பொருட்கள் ஜப்தி
பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சிம்புவை வைத்து `அரசன்' என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டு அதற்கு 1 கோடி ரூபாய் சம்பளம் பேசி முன் பணமாக 50 லட்சத்தை கடந்த 2013 ஜூன் 17ம் தேதி அளித்துள்ளது. ஒப்பந்தத்தின் படி அவர் அந்தப் படத்தில் நடிக்க முன்வராமல் இழுத்தடித்ததாகவும், இதனால் நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது. இந்த விவகாரத்திற்காக நடிகர் சிம்பு மீது வழக்கு தொடுத்துள்ளது நிறுவனம்.

இந்த மனு நீதிபதி கோவிந்தராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. இருதரப்பு விவாதங்களையும் கேட்டு, பின்பு நடிகர் சிம்பு வாங்கிய 50 லட்சம் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் சேர்த்து 85.50 லட்சம் ரூபாயை 4 வாரங்களுக்குள் பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை தரவில்லை என்றால், நடிகர் சிம்பு வீட்டில் உள்ள ரெப்ரிஜிரேட்டர், டி.வி., வாஷிங்மெஷின், கட்டில், ஷோபா செட், மின் விசிறிகள், கிரைண்டர், மிக்ஸி, ஏர்கண்டி‌ஷனர், டைனிங் டேபிள், சேர்கள் ஆகிய பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி. மேலும் சிம்பு பயன்படுத்தும் கார், மொபைல்போன் ஆகியவையும் சேர்த்து ஜப்தி செய்யலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்

Thursday, August 30, 2018

வரலாறு காணாத சரிவில் ரூபாய் மதிப்பு..!

வரலாறு காணாத சரிவில் ரூபாய் மதிப்பு..!
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 23 பைசா சரிந்து, 70.82 என்ற ரீதியில் இருக்கிறது. தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறிக் கொண்டிருப்பதும், அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துள்ளதும் ரூபாய் மதிப்பு வீழிச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது. நேற்று சந்தை நேர முடிவில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 70.59 ஆக இருந்தது. இதையடுத்து இன்று காலை அது, 70.57 ஆக முன்னேற்றம் பெற்றது. ஆனால் அது திடீரென்று சரிந்து தற்போது 70.82 ஆக இருக்கிறது.

Tuesday, August 28, 2018

பீகார் மாநிலத்தில் நடுச்சாலையில் பள்ளிச் சிறுமியின் ஆடைகளைக் களைந்து அத்துமீறல் video inside



பீகார் மாநிலத்தில்
நடுச்சாலையில் பள்ளிச் சிறுமியின் ஆடைகளைக் களைந்து அத்துமீறலில் ஈடுபட்ட 3
பேரில் ஒருவனை போலீசார் கைது செய்துள்லனர்.


சஹர்சா ((Saharsa)) நகரில் நடுச்சாலையில் பள்ளிச் சிறுமியை 3 நபர்கள்
மானபங்கப் படுத்துவதும் அத்துமீறுவதுமான வீடியோ இணையதளத்தில்
வெளியாகியுள்ளது அந்த சிறுமி உதவி கோரிக் கதறும் காட்சிகளும்
பதிவாகியுள்ளன.


வீடியோ காட்சிகளின் அடிப்படையில் ஒருவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Monday, August 27, 2018

18-Year-old Sai Reddy makes over 800,000 Rupees a week from new mobile app.

Sai Reddy is now officially one of the richest 18-year olds in the Pune and the entire India, for that matter. The Pune native was playing on his smartphone last week when he discovered a popular new app called Olymp Trade. He had recently downloaded it but hadn't checked it yet. So, Sai opened the application and started trading with the demo account you get when registering for free. In just 15 minutes he doubled his money, making more than his parents earn working hard the entire month. One week later, Olymp Trade binary options deposited $1,200 of Sai's earnings straight into his mother's bank account. Sai is the only son of Vihaan and Pari Reddy, a typical middle-class couple, both of which are originally from Chennai. Sai's mom taught him how to use a computer at the young age of 6 and ever since then, he had been hooked. When he's home, he can be found usually playing video games online or on Youtube. Their family did not appear to be the "stock trading" type though. That's why his father, Vihaan was shocked when Sai showed him his balance on his phone! Mr. Reddy tells us, "I was watching the game with my wife when all the sudden, I heard Sai yell out, 'Dad, Mom, I just made 8,300 Rupees for us!' I thought he was talking about some game on his computer again. I went into the bedroom to see what the fuss was all about and saw his trader account with graphs and numbers and most importantly with $130 on it. And that was just in 15 minutes! I couldn't believe it at first; I thought it was some kind of a joke. But then Sai told me he was trading at a popular new Olymp Trade binary options app he downloaded. For him it was just like a game. But he took that game seriously reading a lot about market signals and trading strategies on Internet. Later on Sai had surprised us more and more with how much money one can made with binary options. 24,400 Rupees a day and it's not where it really stops!"
First I thought this was some kind of another gambling scam" says Mr. Reddy "but soon with relief I have found out that binary options are offering real currency market trading not some casino or some other hoax. I have read articles on Olymp Trade and learned about binary options. It occured that with it you can trade successfully with much less risk because you have strategies and market signals. They are really easy to find on Internet. This helps a lot! And you can practice it on demo account not risking any real money. "The next day, Olymp Trade holding company contacted the Reddy family to ask where they should wire the money. Sai's parents decided it would be best for Sai to keep the money since he had technically earned it. They opened a savings account for Sai and funded it with a chunk of the money he had made. Sai is the youngest trader to make such profits on a regular basis with binary options, but certainly not the first. Since the beginning of 2017, over 3400 citizens of India started making over 20,000 Rupees daily with Olymp Trade, many of whom had with minimum deposit.
Since the publication of this article, we have received a dozen emails from our readers to thank us for mentioning Olymp Trade options. It was not our intention but it seems that we have a lot of rich Indian readers through this and emails come up every day with stories of new millionaires. His story is one of the most incredible ones, and shows how Olymp Trade manages to change lives of people who don’t lose faith in their lucky star. Sai is just one of the successful Indian traders now. Olymp Trade is well known to be the best trading binary options broker in the world, and in only 3 months in India it had already paid out $3,000,000 to its traders! As far as the Olymp Trade winnings go, our own reporter Sarah couldn't help and also tried her hand at trading and made 8,700 Rupees out of minimal first deposit in a day - "not everyone is so talented in binary options trading as Vivaan sadly! But if you're attentive and coldblooded you will earn money steadily. I have read some articles on Olymp Trade and learned about binary options. It occured that with it you can trade successfuly with much less risk because you have strategies and market signals. They are really easy to find on Internet. This helps a lot! And you can practice it on demo account not risking any real money." In case you didn't know binary options is a stock instrument with fixed revenue and lifetime. If you can predict where the course will go - up or down - you will double your bet. This is no gambling, thousands of professional traders all other the world make millions of dollars every day and now you can join them! You can trade currency pairs, Bitcoin course or company bonds with binary options. It has become accessible for everyone with the growth of Internet technologies in recent years and now it comes to India. You can take easy instructional course on Olymp Trade website to learn how to make right bets and start making money! It is easy

மகள் ஆராதனாவுடன் சிவகார்த்திகேயன் இணைந்து பாடிய ‘வாயாடி பெத்த புள்ள’ பாடலின் லிரிக் வீடியோ

தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்டவர்
அருண்ராஜா காமராஜ். ‘ராஜா ராணி, மான் கராத்தே,மரகத நாணயம்’ போன்ற வெற்றிப்
படங்களில் நடித்திருந்த அருண்ராஜா, சூப்பர் ஸ்டாரின் ‘கபாலி’ படத்தில்
இடம்பெற்ற ‘நெருப்புடா’ பாடலை எழுதி பாடி உலகளவில் ரீச்சாகி விட்டார்.
தற்போது, ‘கனா’ படத்தின் மூலம் அருண்ராஜா காமராஜ் இயக்குநர் அவதாரம்
எடுத்துள்ளார்.


இவர் சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியது
குறிப்பிடத்தக்கது. அருண்ராஜா இயக்கும் ‘கனா’ படத்தின் கதைக்களம் பெண்கள்
கிரிக்கெட்டை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளதாம். ஹீரோயினுக்கு
முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
மேலும், முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளாராம். திபு நைனன் தாமஸ்
இசையமைக்கும் இதற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளா

இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான
‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். இதன் போஸ்ட்
புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். நேற்று (ஆகஸ்ட் 23-ஆம்
தேதி) படத்தின் ஆடியோ & டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிலையில், படத்தில் இடம்பெறும் ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலின்
லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை பாடகி வைக்கம்
விஜயலட்சுமியுடன் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயனும், அவரது மகள்
ஆராதனாவும் பாடியுள்ளனர்.

" `மேற்குத் தொடர்ச்சி மலை' எனக்குத் திருப்தியாக இல்லை" - விஜய் சேதுபதி

Merku Thodarchi Malai

நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவான படம் `மேற்குத் தொடர்ச்சி மலை. லெனின் பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் பலர் நடித்து வெளியாகியிருக்கிறது படம். பலரது பாராட்டுகளையும் பெற்ற இப்படத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நேற்று (26.8.2018) ஏற்பாடு செய்திருந்தனர்.

அதில் விஜய் சேதுபதி பேசியதாவது, " `வெண்ணிலா கபடிக்குழு' சமயத்தில் இருந்தே லெனின எனக்குத் தெரியும். `பண்ணையாரும் பத்மினியும்' பட சமயத்தில் இந்தக் கதைய பத்தி என்கிட்ட சொன்னார். அப்போ என் சம்பளம் 25 லட்சம். என்கிட்ட பணம் இல்ல சார் இப்போதான் லைஃப ஆரம்பிச்சிருக்கேன். யாராவது தயாரிப்பாளர் வந்தா சொல்றேன், இல்லனா நானே சம்பாதிச்சு எடுக்குறேன். நடுவுல உங்களுக்கு வேற யாராவது தயாரிப்பாளர் கிடைச்சா கூட போயிடுங்க பிரச்சனை இல்லனு சொன்னேன். ஒரு வருஷம் கழிச்சும் கூட அதையேதான் சொன்னேன். ஆனா, கடைசியில் நான்தான் அந்தப் படத்தை தயாரிக்கணும்னு அமைஞ்சது.

படம் முடிஞ்சு ரெடியானதுக்குப் பிறகு நானும் பார்த்தேன். உண்மைய சொல்லணும்னா எனக்குப் படம் திருப்திகரமானதா தெரியல. ஏன்னா எனக்கு சினிமா தெரியும், அறிவிருக்குனு நினைச்சிருந்தேன். எனக்கு லெனின் மேல நம்பிக்கை பெருசா இருந்தது, ஒருவேளை நான் எதிர்பார்த்தது வேறயானு ஒரு குழப்பமும் இருந்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு படம் இப்போ வெளியாகியிருக்கு. நல்ல படம் எடுத்திருக்கான் விஜய் சேதுபதின்னு யாராவது பாராட்டினா அது எனக்கானது இல்ல, எனக்கு அது வேண்டவும் வேண்டாம். ஏன்னா இந்தப் படத்தை தொடங்கினதில் இருந்து, அதன் மேல நம்பிக்கை வெச்சு சுமந்துகிட்டிருந்தது லெனின் பாரதி மட்டும்தான். இப்போ நான் எடுத்த படம், நல்ல படம்னு நீங்க பேசிதான் எனக்குப் புரியுது. என் படங்களுக்கான விமர்சனங்கள் வரும்போது நிறைய பேர் மேல் கருத்து வேறுபாடும் கோபமும் வந்திருக்கு. இன்னைக்கு எனக்கு திருப்தி இல்லாத ஒரு படத்தை நீங்க எல்லாம் பாராட்டும் போதுதான், நீங்க எந்த கோணத்தில் ஒரு படத்தை பார்க்கறீங்கன்னு புரியுது, என்னுடைய பார்வைய மாற்றுது. கலைய யாராலும் சுலபமா ஜட்ஜ் பண்ண முடியாதுன்னு இப்போ புரியிது. எனக்குப் பாடம் புகட்டின அத்தனை பேருக்கும் என் நன்றி" எனப் பேசினார் விஜய் சேதுபதி.

பாட்டு, டான்ஸ் எல்லாம் ஓகே. ஆனால்...? - `லக்ஷ்மி' விமர்சனம் - Lakshmi movie review

பாட்டு, டான்ஸ் எல்லாம் ஓகே. ஆனால்...? - `லக்ஷ்மி' விமர்சனம் - Lakshmi movie review
நடனத்தின் மீது வெறி கொண்ட சிறுமி தனது கனவை நிறைவேற்றினாளா என சொல்கிறது `லக்ஷ்மி'

லக்ஷ்மி (தித்யா) அலாரம் டோன் கேட்டால் கூட துள்ளி குதித்து ஆடிவிடும் அளவுக்கு நடனத்தின் மீது வெறி கொண்ட பள்ளி மாணவி. ஆனால் அவளது அம்மா நந்தினிக்கு (ஐஸ்வர்யா ராஜேஷ்) நடனத்தின் மீது மிகப் பெரிய வெறுப்பு. மகளை நடனத்திலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒதுக்கி வைக்கிறாள். அவளது நடனத் திறமையைப் பார்த்து வியப்பாகும் கிருஷ்ணா (பிரபுதேவா), indian pride நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நினைக்கும் அவளுக்கு எப்படியாவது உதவ நினைக்கிறார். அம்மாவுக்குத் தெரியாமல் டான்ஸ் அகாடமியில் சேரவும், திறமையை வளர்க்கவும் உதவுகிறார் பிரபுதேவா. நடனம் என்றாலே வெறுப்பாகும் அம்மாவை சமாளித்து தன் திறமையை உலகத்துக்குக் லக்ஷ்மி எப்படிக் காண்பிக்கிறாள் என்பதே படத்தின் கதை. கூடவே ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடனத்தின் மேல் ஏன் அத்தனை வெறுப்பு, பிரபுதேவா யார்? போன்ற கேள்விகளுக்கும் பதில் சொல்லி படம் முடிகிறது.

வழக்கம் போல் விஜய் தன் ட்ரேட் மார்க் ஃபீலை இந்தப் படத்திலும் கொடுத்திருக்கிறார். நடனத்தில் ஆர்வம் உள்ள சிறுமியின் கதையை முடிந்த அளவு சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.

பிரபுதேவா, தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை 'மெர்குரி'யில் ஒருமுறை நிரூபித்துவிட்டார். எனவே அவருக்கு இந்தப் படத்தின் கதாபாத்திரம் சாதாரணமாக செய்ய முடியும் ஒன்றாகவே படுகிறது. ஆனாலும், கலங்கிப் போய் நிற்கும் காட்சிகளின் மூலம் தன் பங்கை சரியான முறையில் செய்து முடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பெரிய பாத்திரம் இல்லை என்றாலும் தன் இருப்பை முடிந்த வரை நன்றாகப் பதிவு செய்திருக்கிறார். படத்தின் முதன்மைக் கதாபாத்திரமாக இருந்தாலும், நடனத்தில் மட்டும் திறமையைக் காட்டியிருகிறார் தித்யா, நடிப்பில் இன்னும் கொஞ்சம் முயற்சி தேவை. தன்னைவிட சிறப்பாக நடனமாடும் ஒருவரைப் பார்த்து வியப்படைவதும், வாய்ப்பு மறுக்கப்படும் போது வெறுத்துப் போவதுமாக உணர்வுகளை கடத்தி நடித்திருந்த அர்ஜுன், சின்னச் சின்னக் குறும்புகள் செய்து கவனிக்க வைக்கும் அர்னால்ட் ஆகிய கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்திருந்தனர். ஒட்டுமொத்தமாக படத்தில் நடனத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை பேரின் நடனமும் வியப்பைத் தர தவறவில்லை.

ஆனால், அழுத்தமற்ற கதையாக்கம் படத்தின் உணர்வுகள் பார்வையாளர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் சோகம். எனவே, விஜயின் ஃபிலிமோகிராஃபியில் இன்னொரு படம் என்கிறபடியே கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. நடனம் பற்றிய படம் என்பதால் படத்தில் அதிரடியான நடனக் காட்சிகளும், வெற்றியடையும் தருணமும் மட்டும் சிறப்பானதாக இருந்துவிட்டால் போதும் என நினைத்தது போல தெரிகிறது. காரணம் பல உள்ளது. படத்தின் மையம் லக்ஷ்மி கதாபாத்திரம். அவளுக்கு நடனத்தின் மீது ஆர்வம் ஆர்வம் என்பது மட்டுமே காட்டப்படுகிறதே தவிர, எதனால் அவளுக்கு ஆர்வம், ஏன் அவளுக்கு அந்த வெற்றி தேவை என்கிற எந்த விஷயமும் இல்லை. அதனாலேயே எப்படியும் இவள் ஜெயித்துவிடுவாள் என்கிற மிதப்பு வந்துவிடுகிறது. எனவே, அவளுக்கு வரும் தடைகள் நமக்கு எந்த பதற்றத்தையும் உண்டாக்காமல் சென்றுவிடுகிறது. கோவை சரளாவின் கதாபாத்திரம் ஏன் இதை எல்லாம் செய்கிறாது என்பதற்கு சொல்லப்படும் காரணம் காமெடியாக டீல் செய்யப்படுவது, படத்தின் தீவிரத் தன்மையில் சந்தேகத்தை உண்டாக்கவே செய்கிறது. தவிர காமெடி என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் இப்படி பித்தலாட்ட வேலைகளை செய்கிறார் என்பதற்கு காரணம் இவ்வளவு சில்லியானதா?
பிரபுதேவா - ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்கு இடையேயான உறவும் மேலோட்டமாகவே சொல்லப்படுகிறது. கதாசிரியர்கள் விஜய் - நீரவ் ஷா இன்னுமும் தெளிவாக கதையை சொல்லியிருக்க வேண்டுமோ என்கிற எண்ணமும் எழுந்தது.

பரேஷ் ஷிரோத்கர், ரூல் தவ்சன், ஷம்பா நடன அசைவுகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக சாம் சி.எஸ் அமைத்திருந்த பாடல்களும் பின்னணி இசையும் கவனிக்க வேண்டியது. கூடவே நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், கலை இயக்குநர் ராஜேஷும் ஒரு கலர்ஃபுல்லான நடனத் திருவிழாவையே கண் முன் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக டான்ஸ் ரிகர்சலில், ஃப்ளாஷ் பேக்கில் வரும் பிரபுதேவாவின் நடனம், கவிதை ஒன்றை ஒலிக்கவிட்டு பிரபுதேவாவுடன் இணைந்து குழந்தைகளும் ஆடும் நடனம் இரண்டும் ரசிகர்களுக்கான அசத்தல் விருந்து. மேலும் பிரபுதேவா மற்றும் எதிரணியின் கோச் இருவருக்குமான உரசலில் இருந்த தீவிரத்தன்மை சுவாரஸ்யமானதாய் இருந்தது. ஆனால், மிகவும் எளிதாக யூகிக்கக் கூடிய அடுத்தடுத்த காட்சிகள் சோர்வாக்குகிறது.

நெகிழ வைக்க வேண்டும் என்பதற்காக காட்டப்படும் சில காட்சிகள் படத்தின் நாடகத்தன்மையை அதிகரிக்கிறது. நடனம் சம்பந்தமாக எல்லாமும் இருந்தது போல், ஒரு அழுத்தமான கதையும் இருந்திருந்தால் `லக்ஷ்மி'யின் ஆட்டம் அதிர வைத்திருக்கும். கலர்ஃபுல் நடனம், பிரபுதேவா, கிளைமாக்ஸில் வரும் வின்னிங் மொமன்டம் மட்டும் ஒரு டான்ஸ் சினிமாவிற்கு போதும் என நினைப்பவர்களுக்கு லக்ஷ்மி எந்த ஏமாற்றத்தையும் தராது.

‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சி video inside

Pyaar Prema Kaadhal

கோலிவுட்டில் அறிமுக இயக்குநர் இளன் இயக்கி சமீபத்தில் வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’. இதில் ‘பிக் பாஸ்’ போட்டியாளர்களான ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் ஜோடியாக நடித்திருந்தனர். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இதற்கு ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார், மணிக்குமரன் சங்கரா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘கே புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘YSR ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்திருந்தார்.
video link

https://youtu.be/eZCFjm0j9bQ

செப்டம்பரில் ‘சர்கார்’ பட சிங்கிள் டிராக் ரிலீஸா? release date inside...

Sarkar Movie

  • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
  • இந்த படத்தின் ஆடியோவை அக்டோபர் 2-ஆம் தேதி வெளியிடவுள்ளனர்
  • ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிற
அட்லியின் ‘மெர்சல்’ படத்திற்கு பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் 'சர்கார்' படத்தில் ‘தளபதி’ விஜய் நடித்து வருகிறார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நெகட்டிவ் ஷேடில் நடிக்கின்றனராம்.‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

சமீபத்தில், விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட படத்தின் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஆடியோவை அக்டோபர் 2-ஆம் தேதியும், படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, படத்தின் சிங்கிள் டிராக்கை வருகிற செப்டம்பர் 19-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது

`இந்தியன் 2' பட பணியைத் துவங்கிய ஷங்கர் video inside

Indian 2


  • 'இந்தியன்' முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது
  • இதிலும் கதையின் நாயகனாக கமல்ஹாசனே நடிக்கவுள்ளார்
  • ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைப
விக்ரமின் 'ஐ' படத்தின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரெடியாகி வரும் படம் '2.0'. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனையடுத்து இயக்குநர் ஷங்கர், 'இந்தியன்' படத்தின் 2-ஆம் பாகத்தை எடுக்கவுள்ளார்.

1996-ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்திருந்தார். பார்ட்-1 சூப்பர் ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் அதிகமாக உள்ளது. இதிலும் கதையின் நாயகனாக கமல்ஹாசனே நடிக்கவுள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்த படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெறுகிறதாம்.

இப்படத்திற்கு ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லக்ஷ்மி சரவணகுமார் மூவரும் இணைந்து வசனம் எழுதி வருகிறார்கள். தற்போது, இந்த படத்துக்காக ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவி வர்மனும் லொகேஷன் பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் இதர நடிகர்கள் – பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, August 26, 2018

Kerala Floods: Sunny Leone Donates 1,200 Kilos Of Food, Wishes She Could 'Do More

Kerala Floods: Sunny Leone Donates 1,200 Kilos Of Food, Wishes She Could 'Do More'Actress Sunny Leone is the latest addition to the list of celebrities who have contributed to help the people affected in flooded Kerala. On Friday, Sunny shared an Instagram post, in which she mentioned that she and her husband Daniel Weber have donated over 1,200 kg food material for the people affected in the grief-stricken area. Sunny wrote: "Today Daniel and I will hopefully be able to feed a few of the many people in Kerala that need a warm meal with 1,200 kg (1.3 tons) of rice and daal. I know it's not a dent in what actually needs to be sent and I wish I could do more." In her post, the 37-year-old actress also thanked Prateik Babbar and Siddhant Kapoor for organising a special fundraiser for Kerala. She wrote: "Humanity at its finest, Prateik Babbar and Siddhanth Kapoor, the men who arranged an amazing event at B in Juhu to bring help to those in need. You guys are so amazing




Saturday, August 25, 2018

சாலை விதிகளை மீறினால் எமன் வருவார்- பெங்களூரு போலீஸின் விழ்ப்புணர்வு பிரான்க்

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், தெரு-நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவகிறோம்- போக்குவரத்து காவல் துணை ஆணையர் அனுப் அகர்வால் தெரிவித்தார்


சாலை விதிகளை மீறினால் எமன் வருவார்- பெங்களூரு போலீஸின் விழ்ப்புணர்வு பிரான்க்
நீங்கள் சாலை விதிகளை வாகனம் ஓட்டிக் கொண்டு செல்லும்போது தீடிரென எமன் வந்து வழியை மறித்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு எமன் நாடகத்தை தான் நடத்தியுள்ளது பெங்களூரு போக்குவரத்து காவல் துறை.
ஹலசுரு கேட் போக்குவரத்து போலீஸார் ஹெல்மெட் அணியாத, பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பிற விதி மீறல்களைச் செய்பவர்களுக்கு ஆபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் விதமாக எமராஜாவை அம்பாசடராக பயன்படுத்தியுள்ளனர்.
ஜூலை மாதத்தை ஒரு சாலை பாதுகாப்பு மாதமாக நாங்கள் அனுசரிக்கிறோம். இதில் ஒரு பகுதியாக, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், தெரு-நாடகங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவகிறோம்" என்று போக்குவரத்து காவல் துணை ஆணையர் அனுப் அகர்வால் தெரிவித்தார்.
மேலும் “ நாங்கள் எமனை இந்த செய்தியை பரப்புவதற்கான கேரக்டராக பயன்படுத்துகிறோம். போக்குவரத்து நெறிமுறைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியாவிட்டால் எமன் உங்கள் வீட்டிற்கு வருவார் " என்று அவர் கூறினார்.
Advertisement
வாகன ஓட்டிகளை நிறுத்தி, சாலையின் விதிகளுக்கு ஒத்துழைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நினைவூடும் இந்த செயலில் பங்கெடுத்தவர், நாடக கலைஞரான வீரேஷ் ஆவார்.
vye0fe79ik
போக்குவரத்து பாதுகாப்பு விதிகள் முக்கியத்துவம் பற்றி பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த பிரசாரத்தின் நோக்கமாக உள்ளது. போக்குவரத்துப் போலிஸாரைப் பொறுத்தவரையில், பொது விழிப்புணர்வு இயக்கம் விபத்துகளை குறைப்பதில் உதவுகிறது என்று நம்புகின்றனர்.
இந்த ஆண்டு ஜூன் இறுதி வரை, 2,336 விபத்துகள் நடந்துள்ளது. இதில் 330 பேர் உயிரிழந்துள்ளனர், என போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்தனர்.
COMMENT
கடந்த டிசம்பர் மாத இறுதியில், 5,064 விபத்துகள் நடந்துள்ளன என்றும், இதில் 609 பேர் உயிரிழந்தனர் என்றும் கூறினர். 2016 ஆம் ஆண்டில், 7,506 விபத்துகள் நடந்தன, இதில் 754 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

For which film did Leonardo DiCaprio win his first Academy Award?

Leonardo DiCaprio 

1. Trumbo

2. The Revenant

3. Steve Jobs

4. The Martian

Life in desert

MYRIAD HUES Photographs on display at the exhibition 

Ajit Rana tells what drives him into the heartland of Rajasthan

Deserts of India have now been explored in a way that they bring a fresh perspective on how we see it. Rather than the barren landscape, cracks on surfaces it is the creases on countenances of men and women, who lead harsh lives in inhospitable conditions, which have been depicted through black and white and colour images. Meet Ajit Rana, who keeps revisiting Thar Desert as he finds the rural life, rustic ambience and the pastoral communities more fascinating than urban hubs.
Life has virtually come to a standstill in Ajit’s pictures. Rather than the undulating sand dunes, it is the inhabitants who are the focus of his attention. Fascination for village life is apparent in the pictures. Men waiting for an opium ceremony, children chanting morning prayers at a school in a nondescript village, a Raika shepherd and monastery perched on a mountain in Ladakh have been depicted in a way to transport the discerning to these remote places. It is a different world altogether as Ajit gives us a glimpse into difficulties faced by the locals who due to lack of economic activities lead tough lives.
An aged Bishnoi women, whose countenance, once beautiful, is now riddled with lines manifest the hard life of the rural community. Bright festivities, where men and women wear their well preserved traditional attires and jewellery which have old world charm, have been framed for posterity.
“This subject is personal; close to my heart. I like depicting faces, portraits. My endeavour is to tell the entire story of a person through one picture. Words are not be required to tell their stories. In desert there is flora, fauna but what I find fascinating is communities living there like the Bishnois. This exhibition is about people and their lives; not the landscape.”
It is the cheerfulness of the natives, whose faces still cross a smile when they see an outsider in their midst and celebrate their age-old festival and customs with great gusto. “They wear bright costumes, jewellery. Festivals in desert beautifully depict liveliness in the desert.”
Harshness of life also seeps through in the images. “With no irrigation, they have once a year crop. Monsoon is dismal. Bajra or millet is grown in these remote regions of Gujarat and Rajasthan. They survive on bajre ki roti and k er sangri.”
Not a professional photographer, Ajit has taken the trouble of going into the interiors, where pastoral people live a quiet, secluded life, cut off from modern amenities. These are not the places where tourists flock to. His pictures are pride of place at India International Centre Annexe where an exhibition of black and white and colour pictures is currently on.
“As people in rural areas of Rajasthan have primarily been the subject I had to go deep into heartland, wilderness and villages where rural life can best be experienced not only by me but also by others.”
While exploring high altitude desert of Ladakh, which too is part of the exhibition, Ajit faced a life threatening experience. “Three years ago we were crossing Bara-lacha la Pass. It was on the same day when the floods had destroyed Kedarnath. So we faced a heavy snowstorm and were stuck at over 16,000 feet for three hours. This was at high altitude with less oxygen. Breathing became difficult for me because I was then a chain smoker. The entire night I was in and out of consciousness. Good thing about this nightmarish experience was that I quit smoking.”
A globetrotter, Ajit has been mixing work with pleasure. “When I began taking pictures it was not for an exhibition. I have taken pictures in Africa, Scotland, China, Hong Kong, all over the world.”
All the men in images are nattily dressed in traditional dresses. Their bright colour pugarees are a style statement. Similarly bejeweled women look like they need to be on the ramp. So costumes do play a role? “The objective is to showcase their culture. Traditional outfits come alive in festivals. Turbans and jewellery look very interesting. In fact, different communities can be identified by their jewellery. Children have given up traditional dresses and wear T shirts and pants. I have not chosen not to ignore them; they are also captured in modern attire.”
Life in desert of Gujarat, which shares border with the desert State, has also been explored. “I went to Rann of Kutch in May when people do not go there at that time. But this month was ideal for appreciating the beauty of tribal costumes. Lot of richness in their embroideries, colours. Then I also encountered monks in Ladakh who wear traditional ropes. These are simplistic but symbolizes life in monasteries.”
And Ajit has focused on tribals ofi Rann of Kutch. “These are all Muslims who have been living there before the Partition. A boy in a horse Pathan suit is in a black and white picture. All the men wear blue colour suits. Women are shy, conservative and don’t like to come before the camera.”
High altitude desert of Ladakh was new for Ajit. “It is a good tourist destination but it is open only for four months. So many tourists travel to Khardung La, world’s highest peak. Just imagine people can get stuck there for four hours not because of snow but so many people going there. You can go via Manali and then come back by Kargil, Dras, Sringar and Jammu. It can be a whole circuit; so it can be an adventure.”
Entire trip was for 13 days. “Three days it takes to reach Ladakh by road. We had four cars. At Nubra Valley there are sand dunes and Pangong Lake, which 3 Idiots had shown. I have captured that. Then there are monasteries. I have captured male blue bulls engaged in long blood fight, herd of male blue bull.”
Fascination for deserts began in Ajit at a young age. “My father is from Saurashtra in Gujarat and my mother is from Rajasthan. I have seen deserts my whole life although I grew up all over the world as my father was in foreign service. However, I visited Rajasthan every holiday. Memories of our village where the entire family used to gather and we used to have celebrations for weddings and festivals are still alive. The impact of rural life was also very strong on me and in spite of living in cities, I felt just as much at home in a rural environment

பயம் காட்டிய ப்ளூவேல் கேம்… அச்சுறுத்தும் மோமோ சேலஞ்ச்!

பயம் காட்டிய ப்ளூவேல் கேம்… அச்சுறுத்தும் மோமோ சேலஞ்ச்!
பிற மொழிக்கு | Read In

அர்ஜென்டினாவில் இருக்கும் ஒரு 12 வயதுச் சிறுமி இறந்ததற்கு மோமோ சேலஞ்ச் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது

 Share
EMAIL
PRINT
0COMMENTS
பயம் காட்டிய ப்ளூவேல் கேம்… அச்சுறுத்தும் மோமோ சேலஞ்ச்!
சில மாதங்களுக்கு முன்னர், ப்ளூவேல் என்ற வீடியோ கேம் இணையத்தில் எதிர்மறை காரணங்களுக்காக மிகவும் வைரலானது. உலகத்தின் பல்வேறு இடங்களில் பலர் தற்கொலை செய்து கொள்ள இந்த வீடியோ கேம் காரணமாக இருந்தது என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது, இன்னொரு விஷயம் நெட்டிசன்களை சலசலப்படைய வைத்துள்ளது.
மோமோ சேலஞ்ச் எனப்படும் ஒரு விஷயம் தான் தற்போது ப்ளூவேல் போல பலரை அச்சுறுத்தி வருகிறது. அர்ஜென்டினாவில் இருக்கும் ஒரு 12 வயதுச் சிறுமி இறந்ததற்கு மோமோ சேலஞ்ச் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களில் மோமோ என்ற கணக்கு இருக்குமாம். அந்த கணக்கு மூலம் பயனர்களுக்கு மோமோ, தெரியாத பல எண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள சொல்லுமாம். பின்னர் மோமோ, பல உத்தரவுகளை பிறப்பிக்குமாம். அப்போது பயனர்கள் மோமோ-வுக்கு அடிபணிய மறுத்தால், மிகவும் அச்சப்படும் வகையிலான புகைப்படங்கள் அனுப்பப்படுமாம்.
இது குறித்து ட்விட்டரில் பலர் தங்களது பயத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த கேம் மூலம், மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி, அதன் மூலம் கொள்ளையில் ஈடுபடுவது தான் நோக்கமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த மோமோ கேம், மெக்சிக்கோ, ஜப்பான் மற்றும் கொலம்பியாவிலிருந்து செயல்பட்டு வர வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

திருடி விட்டு மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துச் சென்ற வினோத திருடன்

அமெரிக்காவின் கனெக்டிகட்டில் கிறிஸ்துவ தேவாலயத்தில் நுழைந்த திருடன் ஒருவன், பல ஆயிரம் டாலர்கள மதிப்பிலான பொருட்களைத் திருடிவிட்டு மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து சென்ற வினோத சம்பவம் நடந்துள்ளது.
அந்த கடிதத்தில் “ எனக்காக கடவுளிடம் வேண்டுங்கள். என்னை மனித்துவிடுங்கள். என்னை காப்பாற்றுங்கள்” என்று எழுதி இருப்பதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. திருடும் போது அவரது முகம் சோகமாக இருந்திருப்பதும் சி.சி.டி.வி காட்சிகளில் தெரியவந்துள்ளது.

 
 
4000 டாலர்கள் (2.70 லட்சம் ரூபாய்) மதிப்பிலான ஆடியோ, வீடியோ கருவிகளை திருடிச் சென்றிருப்பதாக தேவாலயம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு அன்று அதிகாலை ஒரு மணிக்கு இந்த திருட்டு நடந்துள்ளது. இதில் ஆச்சர்யபடும் விஷயம் என்ன என்றால், திருடன் கேட்டுக் கொண்டபடி அவனுக்காக தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்தப்பட்டது திருடி விட்டு மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துச் சென்ற வினோத திருடன்

அனுமதியை மீறி உங்கள் தகவலை எப்படி பெறுகிறது கூகுள்?

அனுமதியை மீறி உங்கள் தகவலை எப்படி பெறுகிறது கூகுள்?
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனில், லொகேஷன் செட்டிங்கை ஆஃப் செய்து வைத்தால், கூகுளால் நீங்கள் இருக்கும் இடத்தை கண்டறிய முடியாது என நினைக்கிறீர்களா? இல்லை என்கிறது அசோசியேட்டட் பிரெஸ் அமைப்பின் ஆய்வு. ஜி.பி.எஸ் மற்றும் லொகேஷன் செட்டிங்கை ஆஃப் செய்தாலும், கூகுளால் உங்கள் தகவலை எடுக்க முடியும் என்கிறது அந்த ஆய்வு. இடம் குறித்த தகவலைப் பெறுகிறோம், என்று அறிவிக்காத சில அம்சங்கள் மூலம் கூகுள் தகவலை எடுப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள கூகுள் நிறுவனம், இடம் குறித்து தகவலை தெரிவிக்க பயன்பாட்டாளர் மறுப்பதற்கான வசதி சரியாகவே உள்ளது என்றது. பயன்பாட்டாளர் விரும்பும் போது அந்த செட்டிங்கை மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூகுள் தரப்பு கூறுகிறது.
கூகுள் உங்களிடம் இருந்து தகவலை எப்படி எடுக்கிறது, என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது பற்றி அந்த ஆய்வில் தெரியவந்ததை இங்கே கூறுகிறோம். ஆனால், அதை புரிந்து கொள்ள உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் செட்டிங் மற்றும் கூகுள் கணக்கு பற்றியும் முதலில் நீங்கள் புரிந்து வைத்திருக்க வேண்டும்.
மொபைல்:
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் லொகேஷன் சர்விஸ்களை ஆஃப் செய்தால், எந்த தகவலையும் நீங்கள் தர தயாராக இல்லை என்று புரிந்து கொள்ளப்படுகிறது. இடம் குறித்த தகவலை கேட்கும் எந்த ஒரு சேவையாக இருந்தாலும், இந்த செட்டிங்கை ஆஃப் செய்வதன் மூலம் அனுமதியை நீங்கள் மறுப்பீர்கள் என்று அர்த்தம். தேவையான போது இந்த செட்டிங்கை ஆன் செய்து கொள்ளலாம். பிரைவஸி ----> லொகேஷன் சர்விசஸ் சென்று செட்டிங்கை மாற்றிக் கொள்ளலாம்.
கூகுள் கணக்கு:
லொகேஷன் செட்டிங்கை ஆஃப் செய்யாமல், உங்கள் தகவலை கூகுள் எடுப்பதை நிறுத்த நினைத்தால், உங்களுக்கான இரண்டாவது வாய்ப்பு லொகேஷன் ஹிஸ்ட்ரி.
மேலே உள்ள இரண்டு முறைகளில், உங்கள் லொகேஷனை ஆஃப் செய்யலாம் என்கிறது கூகுள். ஆனால், இன்னும் சில வழிகளில் கூகுள் உங்கள் தகவலை எடுக்கிறது என்றும், அதை எப்படி கண்டுபிடிப்பது என்றும் கூறுகிறது ஆய்வு.
COMMENT
கூகுள் அக்கவுன்டில், Personal Info and Privacy---> My Activity சென்று பார்த்தால் நீங்கள் எங்கெல்லாம் சென்று வந்தீர்கள் என்ற தகவல் பட்டியலிடப்படும். அங்கு இருக்கும் லொகேஷன் ஹிஸ்ட்ரி செட்டிங்கை பயன்படுத்தி, மாற்ற முடியும். இதன் மூலம் உங்கள் தகவலை உங்கள் அனுமதி இன்றி முற்றிலும் தடுக்க முடியும்

முதலமைச்சர் மீது ஊழல் புகார் - வழக்கு பதிய உத்தரவிடக் கோரி தி.மு.க மனு

முதலமைச்சர் மீது ஊழல் புகார் - வழக்கு பதிய உத்தரவிடக் கோரி தி.மு.க மனு
பிற மொழிக்கு | Read In

இந்த திட்டத்துக்கான ஒப்பந்தம், ஈரோட்டைச் சேர்ந்த ராமலிங்கம் & கோவுக்கு வழங்கப்பட்டது

 Share
EMAIL
PRINT
0COMMENTS
முதலமைச்சர் மீது ஊழல் புகார் - வழக்கு பதிய உத்தரவிடக் கோரி தி.மு.க மனு
Chennai: நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை வழங்குவதில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக, முதலமைச்சர் மீது தி.மு.க அளித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு துறைக்கு உத்தரவிடுமாறு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க மனு தாக்கல் செய்துள்ளது.
தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர், 5 நெடுஞ்சாலை பணிகளையும், பராமரிப்பையும் தனது உறவினர்களுக்கும் ,பினாமிக்கு கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 3,500 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் நெடுஞ்சாலை திட்டத்துக்கான செலவு முதலில் 713 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பின்னர் 1,515 கோடியாக அதிகரிக்கப்பட்டத்தையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்த திட்டத்துக்கான ஒப்பந்தம், ஈரோட்டைச் சேர்ந்த ராமலிங்கம் & கோவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிறுவனம், முதல்வர் மகன் மித்துனின், மைத்துனரின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
இதில் பெரும்பாலான திட்டங்கள், உலக வங்கியின் நிதி உதவி பெற்றவை என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஜூன் 13-ம் தேதி ஊழல் தடுப்பு துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் நீதிமன்றம், வழக்கு பதிய உத்தரவிடுமாறு ஆர்.எஸ்.பாரதியின் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
COMMENT
இதே போல் கடந்த மாதம், முதலமைச்சர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த வழக்கில், ஊழல் தடுப்புத் துறை முதல் கட்ட விசாரணை நடத்துமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.