கேரள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் நிதி தருவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என அந்நாடு தெரிவித்துள்ளது. மேலும், எந்த தொகையையும் நிதி உதவியாக வழங்க தாங்கள் முடிவு செய்யவில்லை என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி சரியாக சென்று சேர, குழு ஒன்றை அமைத்ததாக மட்டுமே தங்கள் நாடு ஒரு வாரத்துக்கு முன் அறிவித்ததாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்திய தூதர் அஹமத் அல்பனா தெரிவித்துள்ளார்.
“கேரளாவுக்கு உதவ தேசிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இந்திய அரசு மற்றும் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி சென்று சேருவதை உறுதி செய்யும்” என்று மட்டும் தெரிவித்தார் அல்பனா.

COMMENT
அந்த
700 கோடி ரூபாயை ஏற்க முடியாது என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததால்,
கேரள அரசு, மத்திய அரசை சாடி வருகிறது. நிவராணத்துக்கு போதிய நிதி
கொடுக்கவும் மறுக்கிறது, கிடைப்பதையும் ஏற்க மறுக்கிறது மத்திய அரசு என்று
அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த
அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்

No comments:
Post a Comment